The best companion that never bores
Surah Al-'adiyat ( Those That Run )

தமிழ்

Surah Al-'adiyat ( Those That Run ) - Aya count 11

وَٱلۡعَٰدِيَٰتِ ضَبۡحٗا ﰀ ﴿١﴾

மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-

فَٱلۡمُورِيَٰتِ قَدۡحٗا ﰁ ﴿٢﴾

பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,

فَٱلۡمُغِيرَٰتِ صُبۡحٗا ﰂ ﴿٣﴾

பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-

فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا ﰃ ﴿٤﴾

மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,

فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا ﰄ ﴿٥﴾

அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-

إِنَّ ٱلۡإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٞ ﰅ ﴿٦﴾

நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.

وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ ﰆ ﴿٧﴾

அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.

وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَيۡرِ لَشَدِيدٌ ﰇ ﴿٨﴾

இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.

۞ أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ ﰈ ﴿٩﴾

அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-

وَحُصِّلَ مَا فِي ٱلصُّدُورِ ﰉ ﴿١٠﴾

மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-

إِنَّ رَبَّهُم بِهِمۡ يَوۡمَئِذٖ لَّخَبِيرُۢ ﰊ ﴿١١﴾

நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.