தமிழ்
Surah Al-Qari'ah ( The Striking Hour ) - Aya count 11
ٱلۡقَارِعَةُ ﰀ ﴿١﴾
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).
مَا ٱلۡقَارِعَةُ ﰁ ﴿٢﴾
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ ﰂ ﴿٣﴾
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?
يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ ﰃ ﴿٤﴾
அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ ﰄ ﴿٥﴾
மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ ﰅ ﴿٦﴾
எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-
فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ ﰆ ﴿٧﴾
அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.
وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ ﰇ ﴿٨﴾
ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-
فَأُمُّهُۥ هَاوِيَةٞ ﰈ ﴿٩﴾
அவன் தங்குமிடம் "ஹாவியா" தான்.
وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ ﰉ ﴿١٠﴾
இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
نَارٌ حَامِيَةُۢ ﰊ ﴿١١﴾
அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.