தமிழ்
Surah Al-Inshiqaq (The Splitting Asunder) - Aya count 25
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ ﰀ ﴿١﴾
வானம் பிளந்துவிடும் போது
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ﰁ ﴿٢﴾
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது-
وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ ﰂ ﴿٣﴾
இன்னும், பூமி விரிக்கப்பட்டு,
وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ ﰃ ﴿٤﴾
அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ﰄ ﴿٥﴾
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ ﰅ ﴿٦﴾
மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.
فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ ﰆ ﴿٧﴾
ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,
فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا ﰇ ﴿٨﴾
அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا ﰈ ﴿٩﴾
இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.
وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ ﰉ ﴿١٠﴾
ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-
فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا ﰊ ﴿١١﴾
அவன் (தன்குக்) 'கேடு' தான் எனக் கூவியவனாக-
وَيَصۡلَىٰ سَعِيرًا ﰋ ﴿١٢﴾
إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا ﰌ ﴿١٣﴾
நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ﰍ ﴿١٤﴾
நிச்சயமாக, தான் (இறைவன் பால்) "மீளவே மாட்டேன்" என்று எண்ணியிருந்தான்.
بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا ﰎ ﴿١٥﴾
அப்படியல்ல, நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.
فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ ﰏ ﴿١٦﴾
இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ ﰐ ﴿١٧﴾
மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,
وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ ﰑ ﴿١٨﴾
பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ ﰒ ﴿١٩﴾
நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ ﰓ ﴿٢٠﴾
எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்வதில்லை.
وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩ ﰔ ﴿٢١﴾
மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.
بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ ﰕ ﴿٢٢﴾
அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ ﰖ ﴿٢٣﴾
ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.
فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ ﰗ ﴿٢٤﴾
(நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ ﰘ ﴿٢٥﴾
எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.