The best companion that never bores
Surah At-Tariq ( The Night-Comer )

தமிழ்

Surah At-Tariq ( The Night-Comer ) - Aya count 17

وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ ﰀ ﴿١﴾

வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ ﰁ ﴿٢﴾

தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ ﰂ ﴿٣﴾

அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.

إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ ﰃ ﴿٤﴾

ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.

فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ ﰄ ﴿٥﴾

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.

خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ ﰅ ﴿٦﴾

குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.

يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ ﰆ ﴿٧﴾

முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.

إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ ﰇ ﴿٨﴾

இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.

يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ ﰈ ﴿٩﴾

இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.

فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ ﰉ ﴿١٠﴾

மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ ﰊ ﴿١١﴾

(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,

وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ ﰋ ﴿١٢﴾

(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,

إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ ﰌ ﴿١٣﴾

நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.

وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ ﰍ ﴿١٤﴾

அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.

إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدٗا ﰎ ﴿١٥﴾

நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.

وَأَكِيدُ كَيۡدٗا ﰏ ﴿١٦﴾

நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.

فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا ﰐ ﴿١٧﴾

எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.