தமிழ்
Surah At-Tariq ( The Night-Comer ) - Aya count 17
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ ﰀ ﴿١﴾
வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ ﰁ ﴿٢﴾
தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ ﰂ ﴿٣﴾
அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ ﰃ ﴿٤﴾
ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ ﰄ ﴿٥﴾
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ ﰅ ﴿٦﴾
குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ ﰆ ﴿٧﴾
முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ ﰇ ﴿٨﴾
இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.
يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ ﰈ ﴿٩﴾
இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ ﰉ ﴿١٠﴾
மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ ﰊ ﴿١١﴾
(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ ﰋ ﴿١٢﴾
(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ ﰌ ﴿١٣﴾
நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ ﰍ ﴿١٤﴾
அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدٗا ﰎ ﴿١٥﴾
நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
وَأَكِيدُ كَيۡدٗا ﰏ ﴿١٦﴾
நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا ﰐ ﴿١٧﴾
எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.