The best companion that never bores
Surah Al-Ghashiya ( The Overwhelming )

தமிழ்

Surah Al-Ghashiya ( The Overwhelming ) - Aya count 26

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ ﰀ ﴿١﴾

சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?

وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ ﰁ ﴿٢﴾

அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.

عَامِلَةٞ نَّاصِبَةٞ ﰂ ﴿٣﴾

அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.

تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ ﰃ ﴿٤﴾

கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.

تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ ﰄ ﴿٥﴾

கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.

لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ ﰅ ﴿٦﴾

அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.

لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ ﰆ ﴿٧﴾

அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.

وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ ﰇ ﴿٨﴾

அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.

لِّسَعۡيِهَا رَاضِيَةٞ ﰈ ﴿٩﴾

தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.

فِي جَنَّةٍ عَالِيَةٖ ﰉ ﴿١٠﴾

உன்னதமான சுவர்க்கச் சோலையில்-

لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ ﰊ ﴿١١﴾

அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.

فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ ﰋ ﴿١٢﴾

அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.

فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ ﰌ ﴿١٣﴾

அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.

وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ ﰍ ﴿١٤﴾

(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.

وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ ﰎ ﴿١٥﴾

மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-

وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ ﰏ ﴿١٦﴾

விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.

أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ ﰐ ﴿١٧﴾

(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-

وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ ﰑ ﴿١٨﴾

மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,

وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ ﰒ ﴿١٩﴾

இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,

وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ ﰓ ﴿٢٠﴾

இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)

فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ ﰔ ﴿٢١﴾

ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.

لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ ﰕ ﴿٢٢﴾

அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.

إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ﰖ ﴿٢٣﴾

ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-

فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ ﰗ ﴿٢٤﴾

அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.

إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ ﰘ ﴿٢٥﴾

நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.

ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم ﰙ ﴿٢٦﴾

பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.