தமிழ்
Surah Al-Balad ( The City ) - Aya count 20
لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ ﰀ ﴿١﴾
இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ ﰁ ﴿٢﴾
நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
وَوَالِدٖ وَمَا وَلَدَ ﰂ ﴿٣﴾
பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ ﰃ ﴿٤﴾
திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ ﰄ ﴿٥﴾
'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا ﰅ ﴿٦﴾
"ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான்.
أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ ﰆ ﴿٧﴾
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ ﰇ ﴿٨﴾
அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
وَلِسَانٗا وَشَفَتَيۡنِ ﰈ ﴿٩﴾
மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ ﰉ ﴿١٠﴾
அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ ﰊ ﴿١١﴾
ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ ﰋ ﴿١٢﴾
(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
فَكُّ رَقَبَةٍ ﰌ ﴿١٣﴾
(அது) ஓர் அடிமையை விடுவித்தல்-
أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ ﰍ ﴿١٤﴾
அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ ﰎ ﴿١٥﴾
أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ ﰏ ﴿١٦﴾
அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ ﰐ ﴿١٧﴾
பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ﰑ ﴿١٨﴾
அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ ﰒ ﴿١٩﴾
ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ ﰓ ﴿٢٠﴾
அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.