The best companion that never bores
Surah Al-Balad ( The City )

தமிழ்

Surah Al-Balad ( The City ) - Aya count 20

لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ ﰀ ﴿١﴾

இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ ﰁ ﴿٢﴾

நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,

وَوَالِدٖ وَمَا وَلَدَ ﰂ ﴿٣﴾

பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,

لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ ﰃ ﴿٤﴾

திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.

أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ ﰄ ﴿٥﴾

'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?

يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا ﰅ ﴿٦﴾

"ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான்.

أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ ﰆ ﴿٧﴾

தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?

أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ ﰇ ﴿٨﴾

அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?

وَلِسَانٗا وَشَفَتَيۡنِ ﰈ ﴿٩﴾

மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?

وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ ﰉ ﴿١٠﴾

அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.

فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ ﰊ ﴿١١﴾

ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ ﰋ ﴿١٢﴾

(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.

فَكُّ رَقَبَةٍ ﰌ ﴿١٣﴾

(அது) ஓர் அடிமையை விடுவித்தல்-

أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ ﰍ ﴿١٤﴾

அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.

يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ ﰎ ﴿١٥﴾

உறவினனான ஓர் அநாதைக்கோ,

أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ ﰏ ﴿١٦﴾

அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ ﰐ ﴿١٧﴾

பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.

أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ﰑ ﴿١٨﴾

அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.

وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ ﰒ ﴿١٩﴾

ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.

عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ ﰓ ﴿٢٠﴾

அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.