The best companion that never bores
Surah Al-Layl ( The Night )

தமிழ்

Surah Al-Layl ( The Night ) - Aya count 21

وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ ﰀ ﴿١﴾

(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக

وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ﰁ ﴿٢﴾

பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-

وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ ﰂ ﴿٣﴾

ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-

إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ ﰃ ﴿٤﴾

நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.

فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ ﰄ ﴿٥﴾

எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,

وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ ﰅ ﴿٦﴾

நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,

فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ ﰆ ﴿٧﴾

அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.

وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ ﰇ ﴿٨﴾

ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,

وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ ﰈ ﴿٩﴾

இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,

فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ ﰉ ﴿١٠﴾

அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.

وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ ﰊ ﴿١١﴾

ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.

إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ ﰋ ﴿١٢﴾

நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.

وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ ﰌ ﴿١٣﴾

அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.

فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ ﰍ ﴿١٤﴾

ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.

لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى ﰎ ﴿١٥﴾

மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.

ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ ﰏ ﴿١٦﴾

எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.

وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى ﰐ ﴿١٧﴾

ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.

ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ ﰑ ﴿١٨﴾

(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.

وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٖ تُجۡزَىٰٓ ﰒ ﴿١٩﴾

மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.

إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ ﰓ ﴿٢٠﴾

மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).

وَلَسَوۡفَ يَرۡضَىٰ ﰔ ﴿٢١﴾

வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.