தமிழ்
Surah Al-'alaq ( The Clot ) - Aya count 19
ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ ﰀ ﴿١﴾
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ ﰁ ﴿٢﴾
'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ ﰂ ﴿٣﴾
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ ﰃ ﴿٤﴾
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ ﰄ ﴿٥﴾
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ ﰅ ﴿٦﴾
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ ﰆ ﴿٧﴾
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ ﰇ ﴿٨﴾
நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ ﰈ ﴿٩﴾
தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
عَبۡدًا إِذَا صَلَّىٰٓ ﰉ ﴿١٠﴾
ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ ﰊ ﴿١١﴾
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ ﰋ ﴿١٢﴾
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ ﰌ ﴿١٣﴾
அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,
أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ ﰍ ﴿١٤﴾
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
كَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ ﰎ ﴿١٥﴾
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
نَاصِيَةٖ كَٰذِبَةٍ خَاطِئَةٖ ﰏ ﴿١٦﴾
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
فَلۡيَدۡعُ نَادِيَهُۥ ﰐ ﴿١٧﴾
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ ﰑ ﴿١٨﴾
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
كَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب۩ ﰒ ﴿١٩﴾
(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.