The best companion that never bores
Surah Az-Zalzalah ( The Earthquake )

தமிழ்

Surah Az-Zalzalah ( The Earthquake ) - Aya count 8

إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا ﰀ ﴿١﴾

பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது

وَأَخۡرَجَتِ ٱلۡأَرۡضُ أَثۡقَالَهَا ﰁ ﴿٢﴾

இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-

وَقَالَ ٱلۡإِنسَٰنُ مَا لَهَا ﰂ ﴿٣﴾

"அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது-

يَوۡمَئِذٖ تُحَدِّثُ أَخۡبَارَهَا ﰃ ﴿٤﴾

அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.

بِأَنَّ رَبَّكَ أَوۡحَىٰ لَهَا ﰄ ﴿٥﴾

(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.

يَوۡمَئِذٖ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتٗا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ ﰅ ﴿٦﴾

அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.

فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ ﰆ ﴿٧﴾

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.

وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٖ شَرّٗا يَرَهُۥ ﰇ ﴿٨﴾

அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.